
திருப்பூர்: இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற 10 சதவீதம் கமிஷன் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, திருப்பூர் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்தவர் ஜெயராமன் (32). இவர், கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார். இவர், தன்னிடம்ரூ.2000 நோட்டுகள் உள்ளதாகவும், அதற்கு பதிலாக ரூ.500 நோட்டுகளாக வேண்டும் என்றும், மாற்றி தந்தால் 10 சதவீதம் கமிஷன் தருவதாகவும் கூறி, பொங்குபாளையம் காளம்பாளையத்தை சேர்ந்த பைனான்சியர் சபரிநாதன் (30)என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oaekL0J
0 Comments