
தாம்பரம்: கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமான சொத்துகளை ரூ.11 கோடிக்கு விற்று மோசடி செய்த போதகர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தில் ரோமன் கத்தோலிக் தேவாலயங்களின் தலைமையிடமான பேராயம் செயல்பட்டு வருகிறது. இந்த பேராயத்துக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டம் மைக்கல் பட்டியைச் சேர்ந்த பாதிரியார் சிரில் ராஜ் என்பவர் நிர்வகிக்கவும் பராமரிக்கவும் நியமிக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eGkusig
0 Comments