
திருப்பூர்: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சியின்போது சிலைகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், கோபுரத்தில் பதுங்கி இருந்தவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. வழக்கம்போல் நேற்று அதிகாலை கோயில் அர்ச்சகர்கள் நடை திறந்தபோது, உள்ளே பொருட்கள் சிதறி கிடந்ததையும், கோயிலுக்குள் இரண்டு உண்டியல்களை உடைக்க முயற்சி நடந்திருப்பதையும், தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ள பகுதியில் கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டிருந்ததையும், சிலைகள் மீது அணிவித்திருந்த ஆடைகள், அவிநாசிலிங்கேஸ்வரர் மீது இருந்த பொருட்கள் உள்ளிட்டவை களைந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/l8HfAix
0 Comments