
திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 68 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுவின்னுவாம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் தேவன்(54). இவர், சிமென்ட் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி(50). இவர், காலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும், சென்னையில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் கடந்த 19-ம் தேதி சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் திங்கள்கிழமை நள்ளிரவு வீடு திரும்பி உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MmkSuQU
0 Comments