Crime

சென்னை: கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகை, பணம் திருட்டில் ஈடுபட்டுவந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த ஆவடி, 24-வது விரிவாக்கம், வெற்றி நகர் மெயின் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (30). இவர், தனது குழந்தையுடன் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபலமான ஒரு துணிக்கடைக்குச் சென்று, துணிகளை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, கூட்ட நெரிசலில் அவரது குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் செயினை யாரோ பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் ரேவதி புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்துவிசாரணை மேற்கொண்டனர். முதல்கட்டமாக சம்பவம் நடைபெற்ற துணிக்கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், பெண் ஒருவர் துணிக்கடையில் ஆடைகளை வாங்குவது போல நடித்து, ரேவதியின் குழந்தையின் கழுத்தில் அணிந்திருக்கும் செயினை திருடிச் சென்றது தெரிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oZBdMea

Post a Comment

0 Comments