Crime

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் அவரது ஆண் நண்பரால் பலரது கண் முன்னால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. டெல்லியின் ரோஹிணி ஷாபாத் டெய்ரி பகுதியில் நடந்த இச்சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தக் கொலையின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உறுதியான மனம் கொண்டோரையும் உலுக்கிவிடும் அளவுக்கு அந்தக் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கத்திக்குத்து, சிமென்ட் கல்லால் அடி: அந்த வீடியோவில் ஒரு சிறுமியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்துகிறார். அந்தச் சிறுமி சில குத்துகளிலேயே நிலைகுலைந்து அமர்ந்துவிடுகிறார். ஆனாலும், அந்த இளைஞர் விடவில்லை. அந்த இளைஞர் அப்பெண்ணை கத்தியால் திரும்பத் திரும்ப குத்துகிறார். ஒரு கட்டத்தில் கத்தி அச்சிறுமியின் தலையில் பாய்ந்துவிடுகிறது. அதை எடுக்கமுடியாமல் போகவே, அருகே இருந்த சிமென்ட் ஸ்லாபை எடுத்து அச்சிறுமியை கடுமையாக தாக்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n8VBd0e

Post a Comment

0 Comments