Crime

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில், பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகள் புகார் தெரிவிப்பதற்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனைக் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7xwVu1g

Post a Comment

0 Comments