Crime

திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே அரசு கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு, குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று இந்த கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 12 பேர் தப்பிச் சென்றுவிட்டனர்.

மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் மற்றும் மேலப்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர். தப்பிச் சென்ற சிறுவர்களை தனிப்படை போலீஸார் பேருந்து நிலையங்கள், ரயில் நிலைய ங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தேடி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h15R0lE

Post a Comment

0 Comments