
புதுச்சேரி: புதுச்சேரியில் பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரி ழந்தார். இதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி மூலக்குளம் அடுத்துள்ள முத்துப் பிள்ளை பாளையம் ராதாநகர் 3-வது குறுக்கு வீதியில் வசிப்பவர் குசும்குமாரி. இவரது மகன் விஷால் (26). பிஇ முடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் 7 பேருடன் ஓட்டலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நண்பர்கள் காரில் சென்றனர். விஷால் மட்டும் பைக்கில் காரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FywVBOP
0 Comments