
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 7 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். போலி மருத்துவர்கள் குறித்துமாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில், மருத்துவஅதிகாரிகள் மற்றும் பொதுசுகாதார துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
இதில், ராணிப்பேட்டை மாவட்டம், பாண்டியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராபர்ட் என்பவர் பிளஸ் 2 மற்றும் லேப் டெக்னீஷியன் படித்துவிட்டு, திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி, அங்கு ஆங்கில மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Wlm4gwG
0 Comments