
தாம்பரம்: சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர் பெற்றோரை இழந்த நிலையில் தனது பாட்டியுடன் வசித்துவந்தார். பின்னர் தாம்பரம் சானடோரியம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு அந்தஇளம்பெண்ணுக்கும் கோவில்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணன் முகப்பேர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
பின்னர் கிருஷ்ணனும் இளம்பெண்ணும் காதலித்துள்ளனர். நாளடைவில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கிருஷ்ணனின் தொடர்பை இளம்பெண் துண்டித்தார். அதிலிருந்து கிருஷ்ணன் அந்த பெண்ணுக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுப்பது, தகாத வார்த்தைகளால் திட்டுவது, மிரட்டுவதுமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lBV51ne
0 Comments