
சென்னை: பெரியமேடு, மூர்மார்க்கெட் பகுதியில் திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்றுமுன்தினம் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மூர்மார்க்கெட் பார்சல் அலுவலகம் அருகில் சந்தேகத்துக் கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞரின் பையை சோதனை செய்தபோது, அதில் அதிக அளவிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. பிடிபட்ட நபர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜிபன் சந்திரதேப் நாத் (27) என்பது விசாரணையில் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wiZFV9j
0 Comments