Crime

திருவள்ளூர்: திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்சார வயர்கள் திருடியது தொடர்பாக திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளான ஒதிக்காடு, ஈக்காடு, சித்தம்பாக்கம், கீழானூர், வதட்டூர், ஆயலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2022-ம் ஆண்டு முதல், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்சார வயர்கள் தொடர்ந்து திருடு போய் வந்தன. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வெங்கல், பென்னலூர்பேட்டை, புல்லரம்பாக்கம் காவல் நிலையங்களில் மின்சார வாரிய அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/osZNB4X

Post a Comment

0 Comments