Crime

நத்தம்: கோபால்பட்டி அருகே ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபி. இவரது மனைவி தமயந்தி (45). தனியார் தொண்டுநிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கோபிக்கும், அவரது அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே இரண்டு ஏக்கர் பூர்வீகச் சொத்தைப் பாகப் பிரிவினை செய்வதில் பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nX4deMZ

Post a Comment

0 Comments