
திருக்கழுக்குன்றம்: திருக்கழுகுன்றம் அருகே கொத்திமங்கலம் பகுதியில் சொத்து தகராறில் வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியால் அண்ணனை சுட்டு கொன்ற நரிக்குறவ இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருக்கழுகுன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன், சந்திரன் (28). இருவரும் அண்ணன், தம்பிகள். இவர்களுக்குள் அடிக்கடி வீட்டுமனை குறித்த சொத்து தகராறு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தம்பி சந்திரன், தான் வைத்திருந்த வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கியை எடுத்து அண்ணன் வெங்கடேசனை சுட்டுவிட்டு தப்பினார். இதில் அவர் உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/inxOtfZ
0 Comments