
காரைக்குடி: கொள்ளை வழக்கில் கைதான தாய் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடி அருகே கண்டனூரைச் சேர்ந்த ராமு மனைவி பாக்கிய லெட்சுமி (42). இவர் நேற்று முன் தினம் இரவு தனது மகள் ரம்யாவுடன் (15) மாத்தூர் சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அவர்களை வழி மறித்து பழையூரைச் சேர்ந்த அசோக் குமார் (22) பாக்கிய லட்சுமியை கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற ரம்யாவையும் குத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XCcjKzI
0 Comments