
சென்னை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில், பெங்களூரு சிறையிலிருந்த இருவர் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து 9 கிலோ தங்க நகை மற்றும் ரூ 20 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது. கடந்த மாதம் 10-ம் தேதி நடந்த இந்த கொள்ளை தொடர்பாக திரு.வி.க நகர் போலீ
ஸார் விசாரணையை தொடங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xF3PqN0
0 Comments