Crime

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை அடுத்த வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சுப்பிரமணி. இவர், கடந்த 2021 ஏப்ரல் 16-ம் தேதி தனது வீட்டில் வாந்தி - மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாக, சுப்பிரமணியின் தங்கை இந்திரா என்பவர் தியாக துருகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இவ்வழக்கில் காவல்துறை யினர் விசாரணை செய்ததில், உயிரிழந்த சுப்பிரமணியின் மனைவி செல்வி (37) என்பவ ருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்தஜெயமுருகன் (45) என்பவருக்கும் கூடா நட்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கணவன் - மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IEPi3gw

Post a Comment

0 Comments