Crime

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டை செட்டி தெருவைச் சேர்ந்தவர் குமார் (48). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் குமாரிடம் 10 ரூபாய் யாசகம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டு, குமார் அங்கிருந்து சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற குமார், அருகில் இருந்த பிரியாணி கடையில் ரூ.2 ஆயிரம் கொடுத்து, சில்லறை கேட்டுள்ளார்.

யாசகம் கேட்ட நபர் இதை கவனித்துவிட்டு, "உன்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டு, ரூ.2 ஆயிரம் மாற்ற முயற்சிக்கிறாயே?" என்று கூறி, குமாரிடம் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் குமாரின் கழுத்தை அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0FXzgNA

Post a Comment

0 Comments