
வேலூர்: வேலூர் கோட்டையை சுற்றிப்பார்க்க இளைஞர் ஒருவருடன் ஹிஜாப் அணிந்த மாணவி ஒருவர் கடந்த 27-ம் தேதி சென்றுள்ளார். கோட்டை மதில் சுவர் பகுதியில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற இளைஞர்கள் சிலர் மாணவி அணிந்திருந்த ஹிஜாபை கழற்றக்கூறி மிரட்டல் விடுத்தனர். அதை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்ததுடன் சமூக வலைதளங்களில் பரப்பினர்.
இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வட வேலூர் கிராம நிர்வாக அலுவலர்ஜோஷ் சுரேஷ் ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில், 153ஏ, 504, பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக இர்பான் பாஷா(22), இப்ராஹிம் (24), அஷ்ரப் பாஷா(20), முகமது பயாஸ்(22), பிரசாந்த் (20), சந்தோஷ் (22) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 7 பேரை நேற்று கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Yh7fPVx
0 Comments