Crime

திருநெல்வேலி: கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அம்பாசமுத்திரத்தில் உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர்சிங் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. ஜமீன் சிங்கம்பட்டியில் கண்காணிப்பு கேமராவை உடைத்ததாக, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரை போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரது பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zZ3lcEf

Post a Comment

0 Comments