
சென்னை: சென்னை ஈக்காட்டுதாங்கல் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சொர்ணத்தாய் (73). தனியாக வசித்து வரும் இவர், தனது வீட்டில் உள்ள ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதாக அறிவிப்பு பலகை வைத்திருந்தார். கடந்த 31-ம் தேதி 2 இளைஞர்கள் வந்து, மூதாட்டியிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டனர்.
அவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வீட்டில் வேறுயாரும் இல்லை என்பதை இளைஞர்கள் உறுதி செய்துகொண்டனர். பின்னர் இருவரும் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, மூதாட்டி அணிந்திருந்த 8 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8aiHTUk
0 Comments