
சென்னை: சென்னை வியாசர்பாடி, சுந்தரம் பவர் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவருக்கு செல்வி (48) என்ற மனைவி, தேவேந்திரன் (22)என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் தேவேந்திரன் கூடுவாஞ்சேரியில் செல்போன் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணி செய்து வந்துள்ளார்.
நிறுவன பணத்தில், தேவேந்திரன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ.3 லட்சத்தை இழந்துள்ளார். இதனால் கடந்த வாரம் நிறுவனம்சார்பாக கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பணத்தைகட்டுவதாக ஒப்புகொண்டு தவணை வாங்கியுள்ளார். அதன்படி நேற்று பணத்தை திருப்பி கட்ட முடியவில்லை. இதையடுத்து தேவேந்திரன் தலைமறைவானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nU1hCpL
0 Comments