Crime

சேலம்: சேலம் சிவதாபுரம் அருகே கோயிலுக்கு வந்து சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் சிவதாபுரம் அருகே உள்ள திருமலைகிரி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு, இரு வாரங்களுக்கு முன்னர் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்து சென்றார். அவர் கோயிலில் இருந்தவர்களிடம் தகராறு செய்ததாகக் கூறி, திருமலைகிரி ஊராட்சித் தலைவரும் சேலம் வீரபாண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான மாணிக்கம் அவதூறாகப் பேசினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/m9Tj1yg

Post a Comment

0 Comments