Crime

கோவை: கோவை கே.ஆர்.புரத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். பீளமேடு பகுதியில் மின்மாற்றிகளுக்கான காப்பர் கம்பி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த வாரம் இவரது நிறுவனத்தில் பூட்டு உடைத்து புகுந்த மர்ம நபர்கள் 1,440 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச் சென்றனர். புகாரின்பேரில், பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்தனர். காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் (தெற்கு) சிலம்பரசன் மேற்பார்வையில், சிங்காநல்லூர் சரக உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i2GJqc8

Post a Comment

0 Comments