Crime

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டல புலியூர் கிராமத்தில் தனியார் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் குன்றியோருக்கான இல்லத்தில் இருந்து ஜபருல்லா என்பவர் மாயமானது தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல் துறையினர் மற்றும் பல்வேறு அலுவலர்கள் கொண்ட குழுவினர் கடந்த 10-ம் தேதி ஆதரவற்றோர் இல்லத்தில் விசாரணை நடத்தினர்.

அப்போது, அங்கு 130 ஆண்கள், 27 பெண்கள் மற்றும் 27 பணி யாளர்கள் என மொத்தம் 184 பேர் தங்கியிருப்பதும், அடிப்படை வசதிகளின்றி சுகாதாரமற்ற முறையில் அவர்கள் இருந்ததையும், 16 பேர் மாயமாகி இருந்ததையும் அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இது குறித்து ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியதின் பேரில், முதற்கட்டமாக ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க ஆட்சியர் பழனி உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VFBpvZy

Post a Comment

0 Comments