Crime

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பூட்டி இருக்கும் வீடுகளில் திருட்டு, மோட்டார் பைக்குகள் திருட்டு என குற்ற சம்பவங்கள் நீண்டு வருகின்றன. அருப்புக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு நாள்களில் 2 இடங்களில் பைக்குகள் திருட்டு, பழக்கடையில் திருட்டு, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கட்டித் தொழிலாளி கொலை என குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7OnuNUT

Post a Comment

0 Comments