
திருச்சி: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் ஒய் சாலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் நேற்று திறந்து வைத்தார்.
இந்த சோதனைச்சாவடியில் வாகனங்களின் எண்களை தானாகவே கண்டறியும் வசதிகொண்ட 2 கேமராக்கள், பொது அறிவிப்புக்கான ஒலிப் பெருக்கிகள், இரும்பு தடுப்பாண்களுடன் கூடிய நவீன வசதிகள் உள்ளன. திறப்பு விழாவில், பிரண்ட்லைன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாநகர காவல் துணை ஆணையர்கள் சுரேஷ்குமார் (தலைமையிடம்), அன்பு (வடக்கு), உதவி ஆணையர் நிவேதாலட்சுமி, ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PnROWdH
0 Comments