
கோவை: திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தேனய்யா (50). இவர் கோவை மாவட்டம் வால்பாறையில் மனைவி, மகளுடன் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் குடும்பத்தை பிரிந்த தேனய்யா, வேறொரு திருமணம் செய்துகொண்டு திருநெல்வேலிக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், அவரது 17 வயது மகள், தந்தையை பார்க்க 2011-ம் ஆண்டு திருநெல்வேலி சென்றுள்ளார். அங்கிருந்து அவரை மீண்டும் வால்பாறைக்கு கொண்டுவந்து விடுவதாக கூறி அழைத்து வந்த தேனய்யா, பல்வேறு இடங்களில் மகளை அடைத்துவைத்து சித்ரவதை செய்து, மயக்கத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tV93XTf
0 Comments