
திருச்சி: பொங்கல் பரிசுத் தொகுப்பில் வேட்டி, சேலை வழங்காததால் அவசர தொலைபேசி எண் 100-ல் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த டீ மாஸ்டரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு(அவசர தொலைபேசி எண் 100) கடந்த 9-ம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து பேசுவதாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வேட்டி, சேலையும் சேர்த்து வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அவரைக் கொலை செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Y2vy9D8
0 Comments