
ஈரோடு: சென்னிமலை அருகே விஷ மாத்திரை கொடுத்து 4 பேரை கொன்றவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (75). இவருடைய மனைவி மல்லிகா (58). இவர்களது மகள் தீபா (30). இவர்களது தோட்டத்தில் வேலை செய்து வந்தவர் குப்பம்மாள் (65). இதே தோட்டத்தில் வேலைபார்த்து வந்த கல்யாணசுந்தரம் (43) என்பவர், சபரி (22) என்பவர் உதவியோடு, கரோனா தடுப்பு மாத்திரைகள் எனக்கூறி, நால்வருக்கும் விஷ மாத்திரைகளைக் கொடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VNjr4cH
0 Comments