Crime

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வெளிப்பாளையம் சவேரியார் கோயில் தெரு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜம்புகேசவன் மனைவி மகேஸ்வரி(30). நாகை நகராட்சியில் தற்காலிக ஊழியர். இவருக்கு, அப்சனா(10) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

மகேஸ்வரியின் கணவர் ஜம்புகேசவன் கொலை வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, 2014-ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் மகேஸ்வரி மற்றும் அவரது மகள் அப்சனா ஆகியோர் தூக்கில் சடலமாகக் கிடந்தது நேற்று காலை தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/okZpbW8

Post a Comment

0 Comments