Crime

மதுரை: மதுரை மேலூர் மெயின் ரோட்டில் செயல்படும் பிரபல வர்த்தக நிறு வனத்தில் நகைக்கடை பிரிவில் அருள் என்பவர் பொற் கொல்லராகவும், பொன்ராஜ் விற்பனையாளராகவும் பணிபுரிந்தனர். கடந்த 28-ம் தேதி நெல்லை கொட்டாரன் குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் வர்த்தக நிறுவனத்துக்கு வந்தார்.

அவர், தனது 25 பவுன் பழைய நகைகளை விற்றுள்ளார். 18 காரட் மதிப் புள்ள அவரது நகைகளை 22 காரட் மதிப்பிலானது எனக் கூடுதலாக மதிப்பீடு செய்து பொன்ராஜ், அருள் ஆகியோர் வாங்கினர். இதன் மூலம் அவர்கள் ரூ.3.36 லட்சம் இழப்பீடு ஏற்படுத்தியது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hXjHVlI

Post a Comment

0 Comments