Crime

கோவை: கோவை மாவட்டம் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(37). இவரது மனைவி தேவி(31). இரு குழந்தைகள் உள்ளனர். ராஜேந்திரனும், தேவியும் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்.

நேற்று அதிகாலை இருவரும் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றனர். சிறுவாணி சாலை, ஆலாந்துறை அரசு மேல் நிலைப்பள்ளி அருகே வந்தபோது, கோவை நோக்கி வந்த அரசுப் பேருந்து சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜேந்திரனும், தேவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆலாந்துறை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TocqpK5

Post a Comment

0 Comments