Crime

கடலூர்: கடலூரில் தனியார் ரசாயன தொழிற்சாலையில், பீகாரைச் சேர்ந்த சூப்பர்வைசரை அம்மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் அடித்துக் கொன்றனர். மேலும் ஒரு தொழிலாளி கவலைக் கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் முதுநகர் குடிகாட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் (43) என்பவர் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். சஞ்சய் சிங் (32) என்பவர் இங்கு தொழிலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இருவரும் வேலை முடிந்து, சக தொழிலாளர்களுடன் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NGnpc8q

Post a Comment

0 Comments