
திருப்பூர்: செல்போனில் கடன் செயலி வழியாக மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பூர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அவிநாசி அருகே பெருமா நல்லூர் பொங்குபாளையத்தை சேர்ந்த பெண், கடந்த 28-ம் தேதி செல்போன் மூலம் கடன் வழங்கும்செயலிகளில் ரூ.15 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். தவணைத் தொகை செலுத்தும் முன்னரே, பணத்தை உடனடியாக தராவிட்டால் உனது புகைப்படத்தை தவறாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவதாக அப்பெண்ணின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் அப்பெண் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G7vHpix
0 Comments