
ஈரோடு: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.55 கோடி மோசடி செய்த வழக்கில், திருப்பூரைச் சேர்ந்தவரை ஈரோடு குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பச்சமலையைச் சேர்ந்தவர் கஸ்தூரி தேவி. ஆடிட்டர் அலுவலகத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வரும் இவருக்கு, திருப்பூர் ராயபுரத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (45) என்பவர் அறிமுகமானார். தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்து வரும் முக்கிய பொறுப்பில் உள்ள உயரதிகாரிகளுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவர்களின் உதவியுடன் ரயில்வேயில் பணி வாங்கித் தர முடியும் எனவும் கூறி கஸ்தூரிதேவியை நம்ப வைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DgKkNFI
0 Comments