Crime

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் துணைத் தலைவராக இருந்த டி.மஸ்தானை, அவரது உறவினரே கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த மஸ்தான் (66),, அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். 2005-ல் திமுகவில் இணைந்து, சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு செயலாளராக பணியாற்றினார். மருத்துவரான மஸ்தானின் மனைவி சிவபாக்கியமும் மருத்துவர். இவர்களது மகன் ஹாரிஸ் ஷாநவாஸ், மகள் ஹரிதா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HZqYjBM

Post a Comment

0 Comments