
மதுரை: மதுரையில் இளைஞர்களை தாக்கி செல்போன்கள், இரு சக்கர வாகனத்தை வழிப்பறி செய்து தப்பிச்சென்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், குட்டம் பகுதியைச் சேர்ந்த அரசன்மகன் குமார் (27), அவரது சகோதரர் சங்கர்கணேஷ் (17). இருவரும் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் உள்ள பழக்கடை அருகே வாகனத்தை நிறுத்தி, மொபைல் போனில் வழித்தட விவரங்களை ஜிபிஎஸ்சில் பார்த் துக் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XVzJINm
0 Comments