
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த மகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி-திருவண்ணா மலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியபனமூட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி திம்மராயன் (55). இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மகள் சவுந்தர்யாவுக்கு (23) திருமணமாகி சென்னையில் கணவருடன் வசித்து வந்தார். திம்மராயன், பெரியபனமூட்லு பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் மாலை சாலையை கடந்தபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த சரக்கு லாரி மோதியதில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0mVprMA
0 Comments