Crime

சென்னை: தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து, திருட்டு பைக்கில் சென்று அடுத்தடுத்து 12 பேரிடம் செயின் பறித்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொளத்தூர், யுனைடெட் காலனியைச் சேர்ந்தவர் நாகராணி (44). இவர் கடந்த 1-ம் தேதி மாலை கொளத்தூர், திருப்பதி நகர் விரிவு, ஜவஹர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் நாகராணி அணிந்திருந்த தங்கச் செயினை பறித்து தப்பினர். இதுகுறித்து கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7jANJSV

Post a Comment

0 Comments