
திருவள்ளூர்: பட்டாபிராமில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்து விட்டு கடந்த 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், எம்ஜி சாலை, 3-வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் எஸ்.முருகையன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 2015-ம் ஆண்டு புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: பட்டாபிராம், அண்ணா தெருவில் வசித்து வரும் ரூபி என்கிற முருகன் மற்றும் அவர் மனைவி நிர்மலா ஆகிய இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். மேலும், முருகன் வடக்கு பஜாரில் சலூன் கடையையும் நடத்தி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RcPhxHu
0 Comments