
உதகை: போக்சோ வழக்கு விசாரணை தொடர்பாக, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த முரளி ரம்பா உட்பட 8 போலீஸாருக்கு உதகை மகளிர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராபர்ட் என்பவர், தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார். 2016-ம் ஆண்டு அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவரின் 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அந்த சிறுமி தான் படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gm8rvx0
0 Comments