
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (49). இவர் அப்பகுதியில் மெஸ் நடத்தி வருகிறார். இவரது தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சுமார் 30 பேர் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்ல நேற்று இரவு புறப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WH1Surv
0 Comments