
சென்னை: தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 65 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை, கொளத்தூர் செந்தில் நகர் 9-வது தெருவில் வசிப்பர் பிந்தியா தேவி. இவர் கடந்த மே 26-ம் தேதி தாயாருடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். 29-ம் தேதி அவரது உறவினர் வீட்டைப் பார்த்தபோது பிந்தியா தேவியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளேஇருந்த 23 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாகச் சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது திருட்டில் ஈடுபட்டது திருவள்ளூர் மாவட்டம், பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்ற துப்பாக்கி சேகர் (47) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xpu1FBH
0 Comments