
சென்னை: காதலிக்கு பிறந்த பெண் குழந்தையை ரூ.3 லட்சத்து விற்பனை செய்த கார் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் சந்திரசேகர் (26). இவர் அதே மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் காதலித்துள்ளார். திருமணம் குறித்து பேசியபோது இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி சென்னை தி.நகர் சீரணிபுரத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்துகொள்ளாமல் கணவன், மனைவி போல் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது சந்திரசேகருக்கு பிடிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்டதை அறிந்தால் உறவினர்களும், நண்பர்களும் வேறு மாதிரி பேசுவார்கள். எனவே, நாம் இந்த குழந்தையை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிறகு வேறு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனக் காதலியிடம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதற்கு அப்பெண் சம்மதிக்கவில்லையாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gemOoEG
0 Comments