Crime

ஆவடி: முதலீடு செய்த பணத்தை திருப்பி கொடுக்காததால், மருத்துவமனை உரிமையாளர் கடத்தப்பட்டது தொடர்பாக பெண் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை, அம்பத்தூர், லெனின் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (54). இவர், ஆவடி அருகே திருமுல்லைவாயல், குளக்கரை சாலையில், மருத்துவமனை ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, சுந்தரமூர்த்தி மருத்துவமனையை விரிவுப்படுத்த முதலீட்டாளர்களை வரவேற்று விளம்பரம் செய்துள்ளார். அதன் விளைவாக, சேலத்தில் வசிக்கும் நீலமேகம் என்பவர் மூலம் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த வைஷாலி (28) என்ற தனியார் நிறுவன ஊழியர் சுந்தரமூர்த்தியிடம் அறிமுகமாகி ரூ.7 லட்சம் முதலீடு செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GsSmhIp

Post a Comment

0 Comments