
கோவை: தருமபுரி மாவட்டம் பாலக் கோட்டை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (29). இன்ஜினியர். இவர், கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் எஸ்.டி. குளோபல் பிளேஸ்மென்ட் என்ற வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தார்.
முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் வேலை உள்ளதாக அறிவிப்புகளை வெளியிட்டார். இதனை நம்பிய பலர் அவரை அணுகியபோது, வெளிநாட்டில் பணியில் சேர விசா, விமான டிக்கெட் கட்டணம் என அவர்களிடம் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் வசூலித்தார். வெளிநாட்டில் வேலையும் வாங்கி தராமல், கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் இழுத்தடித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/svREctk
0 Comments