
சென்னை: மெரினாவில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை செல்போனில் படம் பிடித்து 3 ஆண்டுகளாக மிரட்டி பணம் பறித்து வந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். 2019 டிசம்பர் 6-ம் தேதி அவர் தனது அலுவலகத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவருடன் மெரினா கடற்கரை சென்றார். அங்கு இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த 40 வயதுடைய ஆண் ஒருவர் தன்னை போலீஸ் என்று கூறி, இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்தார். பின்னர் அந்த புகைப்படத்தைக் காண்பித்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பணத்தைப் பறித்துச் சென்றார். தேவைப்பட்டால் அழைக்கும்போது காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறி அப்பெண்ணின் செல்போன் எண்ணையும் பெற்றுச் சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bN6IhRK
0 Comments