
பெங்களூரு: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் பயங்கர வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலை ஆதரித்து, பெங்களூருவில் உள்ள கச்சார்கனஹள்ளியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஃபாயஸ் ரஷீத் (21) முகநூலில் கருத்து பதிவிட்டார்.
இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ரஷீத் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை விசாரித்த போது, தாக்குதலுக்கு ஆதரவாக யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களிலும் 23 முறை கருத்து பதிவிட்டிருந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hjmHV8o
0 Comments